சென்னை, ஆவடியில் திராவிட இயக்க தமிழ் பேரவை சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் ,திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் , ஆவடி மேயர் உதயகுமார், ஆவடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் என். கே. மூர்த்தி அவர்களும் மற்றும் திராவிட இயக்க தமிழ் பேரவையின் தொண்டர்கள் நூற்றுக்கணக்கான பங்கு பெற்றனர்.
இதில் திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் அவர்கள் பேசியதாவது
அறிவியல் என்று ஒன்று காலம் காலமாக பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் நாம் வளர்கிறோமா என்று கேள்விக்கு மத்தியில், பிற்போக்குத்தனமானவர்கள் அறிவியலை பயன்படுத்துகின்றனர் ஆனால் நாம் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு இன்று கைபேசி பயன்படுத்தாத ஆட்கள் இல்லை. ஆகையால் அந்த கைபேசியினை வெறும் உரையாடலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அதனை வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் உபயோகிக்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் கையில் வைத்திருப்பது கைபேசி அல்ல கன்னடம் பேசி அது. உலகம் உங்கள் கையில் அடங்கியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் நான் சிறுவர்கள் உபயோகிக்கும் கைபேசியினை பார்த்தேன்.
அதில் சோட்டா பீம் என்ற கார்ட்டூன் நிகழ்ச்சி பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் ஏனென்றால் மகாபாரத கதையை மிகவும் சுருக்கமாக சோட்டா பீம் என்ற கார்ட்டூன் நிகழ்ச்சி சுட்டி காட்டுகிறது. சோட்டா என்பது சிறிய என்ற பொருள் பீம் என்பது பீமனை குறிக்கிறது. ஆகையால் அந்த நிகழ்ச்சியில் பீம் என்பவன் பலசாலியாக உள்ளான் சற்று குள்ளமாக இருப்பதினால் அவனை சோட்டா பீம் என்று மக்களை கவரும் வகையில் அறிவியல் வளர்ந்துள்ளது. அதனை ஏன் நாம் நம் பிள்ளைகள் விரும்பி பார்க்கின்றனர்.
நாம் ஏன் பெரியாரைப் பற்றிய சிந்தனைகளையும் அறிஞர் அண்ணா பற்றிய சிந்தனைகளும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்கொண்டு செல்வதில்லை. கையில் வைத்திருக்கும் கைப்பேசி வெறும் உரையாடலுக்கு மட்டுமல்ல நல்ல செய்திகளையும், நல்ல விஷயங்களையும் தெரிந்துக் கொள்ளவும் தான் . ஆகையால் நீங்கள் ஒரு நல்ல செய்திகள் பார்க்கிறீர்கள் என்றால் அதனை ஒரு 10 அல்லது 100 பேருக்காக அதனை பகிர வேண்டும். இவை அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.