spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…

வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…

-

- Advertisement -

சென்னை வில்லிவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தத்துவ பாதை அமைத்தவர். ‘சமத்துவ நீதி படைத்தவர்’ என்ற தலைப்பில் புகழரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் சிநேகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…  கவிஞர் சினேகன் பேசுகையில், தனக்கென பல திறமைகள் தனக்குள் வைத்து இருந்தவர் தான் நமது கலைஞர், மாநில சுயாட்சி வேண்டும் என்று அன்றைய காலகட்டத்திலேயே மாநில உரிமையைக் கேட்டு கோரிக்கை ஏற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான். அவர் பாடம் கற்ற இடம் தெரியுமா ஈவேரா பெரியார் என்கின்ற மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் பாடம் கற்றவர். ஆயிரம் அவமானங்கள் தன் மீது விழுந்தாலும் மக்களுக்காக நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த, நன்னடத்தையும் கொண்டவராக இருந்தவர் தான் கருணாநிதி. 60 ஆண்டு காலம் யாருக்காகவும் சமரசம் இல்லாமல் வாழ்ந்தவர் தான் நமது கலைஞர் அவர்கள். அவருக்கு வந்த விமர்சனங்கள் எல்லாம் நமக்கு வந்தால் ஒரு லட்சம் முறை நாம் தூக்கு போட்டு இறந்திருப்போம்.வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…  இந்தியாவிலேயே ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. இந்தியாவிலேயே பண்பாடு ஒரு மக்களிடம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. இந்தியாவிலேயே அறம் ஒரு மனிதனிடம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான் இருக்கிறது இதற்கெல்லாம் விதை போட்டவர் நமது கலைஞர். மொழி இனம் சமூகம் அரசியல் போராட்டம் எல்லா வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்னும் நாம் தமிழை உயிரோடு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு நீரூற்றி உயிர் போட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்த நூற்றாண்டில் ஒரு ஒப்பற்ற தலைவராக நாம் அவரை எப்போதே கொண்டாடி இருக்க வேண்டும். விமர்சனத்திற்கு பயந்தவர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல கலைஞரின் வாரிசுகள் அல்ல.

ஞானசம்பந்தன் பேசுகையில்,வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…  முத்தமிழறிஞருக்கு சிறப்பு எது என்றால் அவருடைய பன்முகத்தன்மை தான், அவருக்கு அனைத்து துறைகளும் வசப்படும். எழுத்து, பேச்சு எல்லாத் துறையும் அவருக்கு வசப்படும். அவர் எழுதிய பாடல்கள் தனி தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்கின்ற பாடல் வரிகளை கலைஞர் அவர்கள் தான் எழுதி இருப்பார். பூம்புகார் படத்தில் 10 நிமிடம் கலைஞர் அவர்கள் முன்னுரை அளித்திருப்பார். அதற்காகவே நாங்கள் படம் பார்க்க செல்வோம். தமிழை செம்மொழியாக அறிவித்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலை நான் ஆஸ்திரேலியாவில் பார்க்கிறேன் எனக்கு அவ்வளவு ஆச்சரியங்கள் இருக்கிறது.

we-r-hiring

அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…  அரசியல், தேர்தல் என இரண்டு போர் மேகங்கள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் ஆன்மிகத்தால் ஆண்டவனை கையில் எடுத்து இந்த ஆட்சியை சூழ்ச்சி வலையில் சிக்கி வீழ்த்த நினைக்கின்ற கூட்டம் ஒரு புறம், அரசியல் ரீதியாக இல்லாத தோழமையை தன் உடன் சேர்த்துக்கொண்டு ஈடி ,ஐடி ,அமலாக்க துறையோடு வலம் வருகின்ற மத்திய சர்க்கார் ஒருபுறம். இரண்டுக்கும் இடையில் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு, அரசியல் களத்தில் இரும்பு மனிதராக எது வரையினும் அஞ்சோம் நின்றோம் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரராக அன்பு தளபதி ஒருபுறம்,

2026 ஆம் ஆண்டு நம்முடைய முதலமைச்சர் இரண்டாவது முறை ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பது மறுபுறம். செம்மொழி நாள் சபதம் எப்படி இருக்க வேண்டும் என்றால், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழக உறுப்பினர்கள் முழு நேரம் ஐயா கி வீரமணி போல் உழைத்தால் 2026 இல் இருநூறு நம் வசம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில்,வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…  என்னை ரோல் மாடலாக அமைச்சர் கூறினார் நான் ரோல் மாடல் அல்ல ஓல்டு மாடல். இன்று ரோல் மாடலாக இருப்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே ரோல் மாடலாக இருப்பது நமது முதலமைச்சர் மட்டும்தான். நீங்கள் எத்தனை கடவுளைக் கொண்டு வந்தாலும் உங்களால் காவி அடிக்க முடியாது, காணாமல் போன கடவுள்களை கொண்டு வந்தவர் தான் நமது அமைச்சர். மக்கள் நீதி மைய தலைவராக இருக்கக்கூடிய கலைஞானி கமலஹாசன் பெரியார் பற்றாளர் மட்டுமல்ல சீரிய பகுத்தறிவாளர். சேகர்பாபு அவர் கடவுளை பாதுகாப்பவர், நான் கடவுளை மற, மனிதனை நினை என சொல்லக்கூடிய பெரியாரின் தொண்டர். நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போடுபவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். வடக்கிலிருந்து ஒரு சிலர் இங்கு வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன.

கடவுள் இல்லை என்று சொல்கிறது தான் திராவிட இயக்கம். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கூறுகிறோம். நம்முடைய மொழியை செம்மொழி ஆக்கியது நமது கலைஞர் அவர்கள் தான். அமிஷாவுக்கு ஆங்கிலம் தெரியாது, கிரிக்கெட்ல கிளப்புக்கு சென்று அவருடைய மகன் வேண்டுமானால் ஆங்கிலம் பேசுவார். இது திராவிட மண், பெரியார் மண் இதை மாற்ற வேண்டும் என கடைசியாக ராமேஸ்வரத்தில் போய் அமர்ந்தார். பாராளுமன்றத்தில் ராமேஸ்வரத்தில் கூட அவருக்கு ஒரு சீட்டு கூட வரவில்லை. அவர் ஏற்கெனவே வைத்திருந்த ராமன் பகுதியில் கூட அவருக்கு ஒரு சீட்டு கிடைக்கவில்லை. அங்கு எதிர்க்கட்சி தான் வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு ராமன் கூட அவர்களுக்கு கை கொடுக்கவில்லை, இன்று முருகன் என கூறிக்கொண்டு  கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமித்ஷா கழகம் அமித்ஷா இயக்கம் என இன்று நடப்பது என்று வேதனை இருக்கிறது. என்னடா வீரமணி இப்படி மாறிவிட்டார் என நீங்கள் கூறலாம், நீச்ச பாசை என்று சொல்லி எங்களை ஒதுக்கினீர்களே, தமிழ் மொழி நீச்ச பாஷை அல்ல தேவ பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை அல்ல. எதுவும் நீச பாஷை அல்ல, எதுவும் தேவ பாஷை அல்ல என கலைஞர் ஒப்புக்கொண்டார். செம்மொழியை கொண்டு வந்தார். இன்று என்ன செய்தி வருகிறது திமுக வீட்டுக்கு சென்று விடும், கடவுள் அருள் செய்வார் என கூறுகிறீர்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன் இந்த 10 ஆண்டு காலத்தில் சமஸ்கிருதத்திற்கு ஒன்றிய அரசு மோடி அரசு என்ன கொடுத்திருக்கிறது என்றால் 2533கோடி கொடுத்திருக்கிறது.

மோடிக்கு தமிழ் பிடிக்கும், நீர் உயர நெல் உயர உயர உயர என மோடி பேசுவார், பிராம்டரை பார்த்து பேசுவார், நீங்களும் உயர உயர பார்க்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்காது.

தமிழ் மற்றும் மற்ற மொழிகளையும் சேர்த்து 134 கோடி தான் ஒதுக்கி இருக்கிறீர்கள், எங்களுடைய தமிழ் இன்று உலகம் முழுவதும் இருக்கிறது, தமிழ் என்றால் சாதாரணமா, கலைஞர் அவர்கள் செந்தமிழ் மட்டும் அல்ல செம்மொழியாகவும் ஆக்கினார். மோடியிடமும் அமித்ஷா இடமும் ஒரு திரிசூலம் மாட்டிக் கொண்டிருக்கிறது, பெரும்பான்மை இல்லாமல் சில பேர் அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஆர்எஸ்எஸ் நிதி கிடையாது, பிஜேபியின் நிதி கிடையாது, நம்முடைய நிதி.

நூறு வருடத்திற்கு முன்பாக நாற்காலி இருந்தது ஆனால் உட்கார தைரியம் இருந்ததா, காலில் செருப்பு அணிய அனுமதி இருக்கிறதா,  இது அனைத்தையும் பெற்று தந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம் திராவிடர் இயக்கம்.பெண்களுக்கு சொத்துரிமை மாற்றி கொடுத்தது திராவிட இயக்கம் தான், நாங்களெல்லாம் ஈரோட்டில் பெரியார் குருகுலத்தில் உருவாக்கப்பட்டவர்கள், எங்களை விமர்சனம் செய்தால்தான் எங்களுக்கு இளமை அதிகரிக்கும். பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்றால் உடன்கட்டை ஏற வைத்திருப்பார்கள், தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் என்பதை ஒழித்துக் கட்டியது எது என நீங்கள் நினைத்துப் பாருங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொண்டு வந்தவர் கலைஞர்.

அவர்கள் கையில் இருக்கும் திரிசூலம் என்பது சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவிக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் சட்டம் கொண்டு வந்தார். அவர் இருக்கும் போது அமைதி புரட்சி இருந்தது. அம்பேத்கர் இருக்கும்போது சொத்துரிமையை முடிக்க முடியவில்லை அதனை கலைஞர் அவர்கள் தான் செய்து காட்டினார். பத்திரப்பதிவு இன்று நம் கையில் இருக்கிறது, பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் 10 விழுக்காடு சலுகை, இந்த ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலாவது மகளுக்கு சலுகை உண்டா? இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டியது உங்களுக்காக, உங்கள் சந்ததிகளுக்காக, உங்களுடைய வருங்காலத்திற்காக, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொள்ள மாட்டார்கள் தமிழர்கள். இது எப்போதும் மக்கள் இயக்கமாக தான் இருக்கும் என்றாா்.

பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்

MUST READ