Homeசெய்திகள்சென்னைசென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒய்எம்சிஏ கட்டிடத்தில் வெடிகுண்டுகள்

சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒய்எம்சிஏ கட்டிடத்தில் வெடிகுண்டுகள்

-

சென்னை விமான நிலையம் மற்றும் ஒய்எம்சிஏ கட்டிடத்தில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக அதிகாலை நேரத்தில் மின்னஞ்சல் வந்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒய்எம்சிஏ கட்டிடத்தில் வெடிகுண்டுகள்

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனையிட்டதில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.

இதேபோல் ஒய்எம்சிஏ கட்டிடத்தில் வெடிகுண்டு என மிரட்டல் வந்ததும் இரண்டுமே புரளி என்பது தெரியவந்துள்ளது.

போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தியும் விமான நிலையம் மற்றும்  ஒய்எம்சிஏ வளாகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவி்க்கின்றனர். இதே போன்று ஒரு வாரத்திற்கு முன்பும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ”இன்னும் ஒரு வாரத்தில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும்” என அநாமதேய அஞ்சல் (anonymous mail) மூலம் தகவல் வந்துள்ளது.

ஒரு தனியார் விமான நிறுவனம் மற்றும் இரண்டு ஊடக நிறுவனங்கள் இந்த அஞ்சல் -ஐ பெற்றுள்ளனர். இந்த மின்னஞ்சலின் ஆதாரம் குறித்து காவல்துறையின் சைபர் பிரிவு விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .

MUST READ