Homeசெய்திகள்சென்னைசென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

-

- Advertisement -

 

சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!
File Photo

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், காக்களூர் பண்ணைகளில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 01) காலை 06.00 மணி நிலவரப்படி பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் 15- க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!

வெளிமாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால்வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு, பால் கேன்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட புறநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்திலும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

பால் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் சரி செய்யப்படும் என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்த நிலையில், மீண்டும் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று (மே 31) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ