அரசு நிர்ணயிக்கிற அனைத்து வரியையும் செலுத்துகிறோம் ஆனால், எங்களுக்கு அடிப்படை வசதியும் உரிய பாதுகாப்பும் இல்லை. இதனை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகமான கோயம்பேடு மொத்த சந்தையின் ஒரு பகுதியாக கனி அங்காடி செயல்பட்டு வருகிறது. கனி அங்காடியில் 850 பழக்கடைகள் உள்ளது.

கடந்தாண்டை விட இந்த ஆண்டு மாம்பழத்தின் விளைச்சல் வரத்து அதிகமாக உள்ளது. எதிர்பார்த்த நிலையில் விற்கவில்லை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தான் நஷ்டம். மாம்பழத்தின் விலை கடந்தாண்டை விட இந்த ஆண்டு பாதிக்கு பாதி விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் அதிகப்படியான மாம்பழங்களை குப்பையில் கொட்ட வேண்டியதாக உள்ளது. இதனால் மார்க்கெட்டின் உள்ளே அசுத்தமும் துர்நாற்றமும் வீசுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கனி அங்காடிக்கென தனி குப்பைத்தொட்டியை வைக்க வேண்டும்.கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரும் பழங்களை இறக்கி அந்தந்த கடைகளுக்கு ஏற்ற தான் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஆனால், இங்கு கணக்கெடுத்தால் சந்தையில் சம்பந்தம் இல்லாமல் வெளியில் இருந்து வந்து வியாபாரம் செய்வதற்காகவே அதிகமாக மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஐந்து வருடத்திற்கு முன் 100 மூன்று சக்கர வாகனங்கள் இருந்தன. ஆனால் இப்போது 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வண்டிகள் உள்ளது. பெயரளவுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே கட்டணம் வாங்குகிறார்களே தவிர முறைப்படி நடப்பதில்லை.
மார்க்கெட்டின் உள்ளே மூன்று சக்கர வாகனங்களால் அதிக நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு காவல்துறை கண்கானிப்பு வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், வாடிக்கையாளர்கள் மீது வண்டியை ஏற்றி விடுகின்றனர், கீழே கொட்டும் குப்பையை சிலர் எடுத்து கழுவி விடுகின்றனர். அதுவும் தடுக்கப்பட வேண்டும். வியாபாரிகள் கேட்டால் நீங்கள் யார் கேட்க என்கிறார்கள். இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகள் முறையாக இல்லை எனவும், இலவச கழிப்பறையாக அதனை அரசு மாற்றியுள்ளது. ஆனால் கழிவறைகள் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. பயன்படுத்தும் சிலவற்றிலும் சரியாக தண்ணீர் வசதிகள் இல்லை. அசுத்தமாக பழங்களை ரோட்டில் கொட்டப்படுவதும், அதன் மீதே சிறுநீர் கழிப்பது என சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.
கோயம்பேடு மொத்த சந்தையில் சிப்ஃட் முறையில் வேலையாட்களை நியமித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான குப்பை தொட்டி வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாகவே உள்ளது. கோயம்பேடு மொத்த சந்தையில் பழங்களை பதப்படுத்த குடோன் வேண்டும் எனவும், சி.எம்.டி.ஏவின் அறிவுறுத்தலின் படி பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்