கடலில் குளித்து கொண்டிருந்தபோது அலையில் சிக்கிய சிறுவன் ஐயோ யாராவது வந்து காப்பாற்றுங்க என கதறிய நண்பன். ஓடி கடலில் குதித்து சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றி உதவி ஆய்வாளர்.சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் சிறுவர்கள் இரண்டு பேர் கடலில் குளிக்க வந்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்படவே அவனுடன் வந்த மற்றொரு சிறுவன் சாலைக்கு ஓடி வந்து தனது நண்பனை காப்பாற்றுமாறு கத்திகூச்சலிட்டுள்ளான்
அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த எண்ணூர் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மீனவர்களோடு சேர்ந்து அலையில் சிக்கிய சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது சிறுவன் பேச்சுமூச்சு இல்லாமல் இருந்துள்ளான்
உடனடியாக கரையில் இருந்த வலைமீது சிறுவனை போட்டு அவனது முதுகை தட்டி அமுக்கி மயங்கிய சிறுவனை நினைவிற்கு கொண்டு வந்துள்ளார். முகத்தில் காயமடைந்த சிறுவனை ஆம்புலன்ஸ் முலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவர்கள் இருவரும் எண்ணூர் காமராஜர் பகுதியை சேர்ந்தவர்கள்”என்பதும் 12வயதான இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் இங்கு குளிக்க வந்தது தெரியவந்துள்ளது. இந்த பகுதிகளில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் அலையில் சிக்கி மயங்கிய சிறுவனை மீட்டு முதலுதவிஅளித்து காப்பாற்றிய உதவி ஆய்வாளரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் விபத்து – முதியவர் உயிரிழப்பு