spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

-

- Advertisement -

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்த துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

we-r-hiring

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

அப்போது, கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை டிராலி இயந்திரத்தில் வைத்து தள்ளிச்சென்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை மறித்து கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை சோதனை செய்தனர். அப்போது, கருவிகளுக்குள் 3 பார்சல்களில் சுமார் 2.2 கிலோ தங்க பசை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

gold

இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும். தங்கக் கடத்தல் தொடர்பாக விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உட்பட இருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இலங்கையை சேர்ந்த பயணி ஒருவர், தங்கம் பசையை கடத்திவந்தது தெரியவந்தது.

MUST READ