சென்னையில் 2 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தம்
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் நிறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோக கம்பிகள் பழுதால், பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முதல் நடைமேடையில் நிற்பதால் பயணிகள் தவிப்பு. மின் இணைப்பை சரிசெய்யும் முயற்சியில் ரவில்வே மின் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிறுத்தம் காரணமாக பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.