போலா சங்கர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் மற்றும் பலர் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது போலா சங்கர் எனும் திரைப்படம் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் லட்சுமி மேனன் கதாபாத்திரத்திலும் தமன்னா சுருதிஹாசன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஏ கே என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சாகர் மகதி இசை அமைக்க டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
தற்போது, டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
So it’s a wrap for #BholaaShankar dubbing!
Very pleased to see how the film has shaped up. It is a sure fire mass entertainer and will appeal to the audiences in a big way! Mark your calendars! See you at the Movies!! #BholaaShankarOnAug11 pic.twitter.com/3ufoWJAwqp— Chiranjeevi Konidela (@KChiruTweets) July 6, 2023
அதில்,போலா சங்கர் டப்பிங் பணிகள் நிறைவடைந்தது. தயவுசெய்து படம் எப்படி உருவாகி இருக்கிறது என்று பாருங்கள். கண்டிப்பாக இது ஒரு மாஸ் என்டர்டெய்னராக இருக்கும். பார்வையாளர்களை பெரிய அளவில் கவரும். உங்கள் காலண்டர்களில் குறித்துக் கொள்ளுங்கள். ஆகஸ்ட் 11ஆம் தேதி போலா சங்கர் திரைப்படத்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.