அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் கடைசியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் தனது 22 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரூ.800 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் நிலையில் படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கப் போவதாகவும், தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிர்ணாள் தாகூர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கப் போவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, கியாரா அத்வானி, வாமிகா கேபி, ஊர்வசி ரௌத்தலா ஆகியோரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு ICON என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.