Homeசெய்திகள்சினிமாசீயான் விக்ரமுக்காக உருவாகி தனுஷுக்காக மாறிய ஹிட் பாடல்....போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்!

சீயான் விக்ரமுக்காக உருவாகி தனுஷுக்காக மாறிய ஹிட் பாடல்….போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்!

-

- Advertisement -

சீயான் விக்ரமுக்காக உருவாகி தனுஷுக்காக மாறிய ஹிட் பாடல்....போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்!தனித்துவமான கதை மற்றும் திரைக்கதைகளால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவர் ஒரு நடிகருடன் இணைந்தால் அந்த நடிகர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக மாறிவிடுவார். செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன், 7/G ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் இன்றளவும் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும். அதைத்தொடர்ந்து இவர் NGK ,நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்களையும் இயக்கி இருந்தார். இந்நிலையில் செல்வராகவன் முன்னதாக சீயான் விக்ரமை வைத்து “சிந்துபாத்” என்ற படத்தை இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படம் உருவாகாமல் போனது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவிருந்தார். அதேபோல் செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியான “மயக்கம் என்ன” படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைப்பாளராக பணியாற்றினார். சீயான் விக்ரமுக்காக உருவாகி தனுஷுக்காக மாறிய ஹிட் பாடல்....போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்!இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நான் சொன்னதும் மழை வந்துச்சா…” என்ற பாடல், முன்னதாக விக்ரம் நடிப்பதாக இருந்த “சிந்துபாத்” படத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும் அப்படம் டிராப் ஆனதால் மயக்கம் என்ன படத்தில் அந்தப்பாடலை பயன்படுத்தினோம் என்றும் ஜி.வி.பிரகாஷ் குமார், செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மயக்கம் என்ன படத்திலும் அப்பாடல் சரியான காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து ஜிவி பிரகாஷ் கூறிய இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ