Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் விபத்துகள்.... ஜூலை 25ல் படப்பிடிப்புகள் ரத்து..... ஏன் தெரியுமா?

படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் விபத்துகள்…. ஜூலை 25ல் படப்பிடிப்புகள் ரத்து….. ஏன் தெரியுமா?

-

- Advertisement -

பெப்சி யூனியனில் இணைக்கப்பட்ட முக்கிய ஐந்து சங்கத்தினருக்கு படப்பிடிப்பு தளத்தில் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது!

விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும் நாளான ஜூலை 25 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் ரத்து!படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் விபத்துகள்.... ஜூலை 25ல் படப்பிடிப்புகள் ரத்து..... ஏன் தெரியுமா?

சென்னையில் நடைபெற்ற சர்தார்-2 படப்பிடிப்பு தளத்தில் சண்டை கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். இது தொடர்பாக பெப்சி யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் பெப்சி யூனியன் சங்க உறுப்பினர்களுக்கான தகுந்த பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும் எனவும் ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை பலமுறை தயாரிப்பு சங்கத்திடமும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெப்சி யூனியன் வேண்டுகோள் வைத்துள்ளது. ஆனால் ஒரு சில தயாரிப்பு நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இதை பின்பற்றுவதில்லை.

இந்த நிலையில் பெப்சி யூனியனின் இணைக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரும் ஜூலை 25ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்த பெப்சி யூனியன் திட்டமிட்டுள்ளது.படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் விபத்துகள்.... ஜூலை 25ல் படப்பிடிப்புகள் ரத்து..... ஏன் தெரியுமா?

இதில் திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட் மேன் சங்கம், சவுத் இந்தியா சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீசியன் யூனியன், தென்னிந்திய திரைப்பட மற்றும் டிவி சண்டை இயக்குனர்கள் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர், தமிழ்நாடு திரைப்படம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் உள்ளிட்ட ஐந்து சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென பெப்சி யூனியன் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்காக அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை சார்ந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ