- Advertisement -
சாண்டல்வுட் எனும் கன்னட திரையுலகை கலக்கி வருபவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. தனது திரைப்பயணத்தை இயக்குநராக தொடங்கிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரிஷப். கேஜிஎஃப் என்ற வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

முதலில் இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியானது. அந்த மொழியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, காந்தாரா தமிழ் தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வௌியிடப்பட்டது. இந்தியா முழுவதும் வரவேற்பும் கிடைத்தது. இப்படத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டது. தற்போது காந்தாரா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




