சின்ன வயதில் அழகரை ரசித்தேன்… நடிகர் சூரி பூரிப்பு…
![]()
நடப்பு ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர் கோயில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 8-ம் தேதி முகூர்த்தகால் நட்டு, திருவிழா தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி விஜயமும் நடந்தது. இதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
![]()
இந்நிலையில், இன்று அதிகாலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாகக, வண்டியூர் வீரராகவப் பெருமாள் முன்கூட்டியே வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமன்றி, திண்டுகல், சிவகங்கை, விருதுநகர், ராமநாடு, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.
![]()
நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் கலந்து கொண்டார். மக்களோடு மக்களாக நின்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சூரி, சிறு வயதில் தந்தையின் தோள் மீது அமர்ந்து அழகர் ஆற்றில் இறங்கியதை கண்டு ரசித்திருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.