நடிகர் சூர்யா, மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ். அதைத்தொடர்ந்து இவர் வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதே சமயம் இவர், மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார். இந்நிலையில் தான் மனோஜ் பாரதிராஜாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தற்போது அவர் மாரடைப்பு காரணமாகமனோஜ் நேற்று (மார்ச் 25) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததை அடுத்து நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 26) மாலை 4:30 மணியளவில் மனோஜின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகரில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து கேள்விப்பட்ட சூர்யா, படப்பிடிப்பிலிருந்து இரவோடு இரவாக விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் என்பதும், விமான நிலையத்திலிருந்து நேரடியாக மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.