spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு பிறகு நாம் ஏன் மாற வேண்டும்? - நடிகை பாவனா

திருமணத்திற்கு பிறகு நாம் ஏன் மாற வேண்டும்? – நடிகை பாவனா

-

- Advertisement -
தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அவர் அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழில் உச்ச நடிகையாகவும் அவர் விளங்கினார். தமிழ் மட்டுமன்றி மலையாளத்திலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வந்தார். இடையே, நடிகர் திலீப்குமாரால் பல பிரச்சனைகள் உருவெடுத்தன. இந்த பிரச்சனையால் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு மாறி மாறி அலைந்து திரிந்தார் நடிகை பாவனா. இதையடுத்து, தற்போது மீண்டும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழில் ஒரு படம் நடித்து வரும் பாவனா, மலையாளத்தில் டொவினோ தாமஸூடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணத்திற்கு பிறகு நடிகையின் இலக்கு மாறிவிடும் என்று பேசப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை. திறமையும், செயல்பாடும் திருமணத்திற்கு பிறகு மாற்றம் ஏற்படாது. திருமணத்திற்கு நாம் ஏன் மாற வேண்டும் எனவும் நடிகை பாவனா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

MUST READ