- Advertisement -
தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமைகள் அரங்கேறுவதாக, பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமானார். அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை ராதிகா.
