spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'!

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

-

- Advertisement -

லால் சலாம் திரைப்படம் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஓடிடிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'!

கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருந்தார். மேலும் செந்தில், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருந்தனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படமானது கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் படமாக வெளியானது.

we-r-hiring

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில் இந்த படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தொலைந்து போன காட்சிகள் சிலவற்றை தங்களால் எடுக்க முடிந்ததாகவும் ஓடிடியில் வெளியாகும் போது இப்படத்தின் டைரக்டர் கட் வெளியாகும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படமானது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ