நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு 2024 ஜூன் மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் அஜித், குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகிறது. அதேசமயம் கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் அஜித். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் மோகன் ராஜா அஜித் நடிப்பில் புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும் மோகன் ராஜா அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்லியதாகவும் அதற்கு அஜித் பாசிட்டிவ்வான பதில் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆகவே விரைவில் அஜித், மோகன் ராஜா கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். அடுத்ததாக மோகன் ராஜா ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.