தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் நல்ல வரவேற்பைப் பெறும் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது. அப்பளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனிடையே, சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் சபாநாயகன். மேகா ஆகாஷ், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசோக் செல்வன், முதல் காதலை விட முதல் க்ரஷ் இன்னும் இனிமையானது என்றும், எப்போதும் நம் மனதில் இடம் பிடித்திருக்கும். அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் சபா நாயகன் என்று கூறினார். காதலை தாண்டி நண்பர்களின் முக்கியத்துவத்தையும் இப்படம் பேசும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.