பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சு குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆண்டாண்டு காலமாகவே தமிழ்நாடு அரசு இந்தி மொழி திணிப்பை வலுவாக எதிர்த்து வருகிறது. சமீபத்தில் கூட ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பெயர் பலகைகளில் இந்தி மொழி எழுத்துக்கள் அழிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு ஆபத்தாக நேரிடும் என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இந்நிலையில்தான் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “தமிழ் மக்கள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். ஆனால் நிதி ஆதாயத்திற்காக மட்டும் ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்கிறார்கள்? இது என்ன லாஜிக்?” என்பது ஒன்றை கேள்விகளை எழுப்பியிருந்தார். அத்துடன், “சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. மக்கள் பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். பவன் கல்யாணின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த கடைசி வரியை கவனித்தீர்களா?
இவர்களின் நோக்கம் மும்மொழியல்ல. ஹிந்தி, சமஸ்கிருதம் எனும் இருமொழிக்கொள்கை மட்டும்தான்.
தமிழ்ப்படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்கிறீர்கள் என்கிறார்.
ஹிந்தி மீது அவ்வளவு பாசம் இருந்தால்.. நீங்கள் ஹிந்தி மொழியில் மட்டும் ஒரு படம் நடித்து, அதை… pic.twitter.com/9vqukuzgjI
— Blue Sattai Maran (@tamiltalkies) March 15, 2025
அதில் அவர், “அந்த கடைசி வரியை கவனித்தீர்களா? இவர்களின் நோக்கம் மும்மொழி அல்ல. இந்தி, சமஸ்கிருதம் எனும் இரு மொழிக்கொள்கை மட்டும்தான். தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள் என்கிறார். இந்தி மீது அவ்வளவு பாசம் இருந்தால் நீங்கள் இந்தி மொழியில் மட்டும் ஒரு படம் நடித்து அதை சமஸ்கிருதத்தில் டப் செய்து ஹிட்டாக்க முடியுமா? உங்கள் எதிர்ப்பை காண்பிக்க ஹரிஹர வீரமல்லு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய மாட்டேன் தமிழில் டப் செய்து ஓடிடியில் வெளியிட மாட்டேன் என சொல்லுங்கள் பார்க்கலாம்? வியாபாரத்தையும் கல்வியையும் முடிச்சுப் போட்டு பேசும் ஞானப்பழமே” என்று குறிப்பிட்டுள்ளார்.