தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
தனுஷின் 51வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகின்றனர். மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்ற வந்தது. இதற்கிடையில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர்.
இந்நிலையில் குபேரா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -