நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
Happy to announce that Tamilnadu Theatrical Rights of our film #NEEK has been acquired by @RedGiantMovies_ @MShenbagamoort3
With Love, Worldwide Release on 7th Feb,2025 #NEEK #DD3 #NilavukuEnMelEnnadiKobam pic.twitter.com/p3QM29EP1G
— Dhanush (@dhanushkraja) December 11, 2024

இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.