பிரபல நடிகர் அருள்மணி காலமானார். இவருடைய வயது 65
தற்போதுள்ள அவசர காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டால் இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுவதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பலரும் மாரடைப்பினால் உயிரிழக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக லொள்ளு சபா சேஷு, அவரைத் தொடர்ந்து டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் அருள்மணியும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் அழகி, தாண்டவகோனே, தென்றல், சிங்கம், லிங்கா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் இவர் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையிலும் பணியாற்றியவர்.
மேலும் இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் ஆவார். இவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அருள்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அருள்மணியின் குடும்பத்தாருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.