Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தின் ரன் டைம் இவ்வளவு தானா?.... ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி முடிவு!

‘குட் பேட் அக்லி’ படத்தின் ரன் டைம் இவ்வளவு தானா?…. ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி முடிவு!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.'குட் பேட் அக்லி' படத்தின் ரன் டைம் இவ்வளவு தானா?.... ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி முடிவு!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து இவருக்கு அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைக்க, குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அஜித்தின் 63வது படமாகும். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க மகனாக கார்த்திகேயா தேவ் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 'குட் பேட் அக்லி' படத்தின் ரன் டைம் இவ்வளவு தானா?.... ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி முடிவு!மேலும் இவர்களுடன் இணைந்து பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படமானது கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் அப்பா- மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே இப்படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அடுத்தது நாளை மறுநாள் (ஏப்ரல் 3) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'குட் பேட் அக்லி' படத்தின் ரன் டைம் இவ்வளவு தானா?.... ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி முடிவு!அதன்படி 2 மணி நேரம் 18 நிமிடங்கள் தான் இந்த படத்தின் ரன் டைம் என தகவல் வெளியாகி வருகின்றனர். இந்த தகவல் அறிந்த சில ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இன்னும் சில ரசிகர்கள், படத்தின் நீளம் அதிகமாக இருப்பின் பார்வையாளர்களுக்கு அது சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதனால் படக்குழு எடுத்த இந்த அதிரடி முடிவு மிகவும் சரியானது எனவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ