ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி. இவர் ஆழமான சமூக கருத்துக்களை எடுத்துரைக்கும் படங்களான நிமிர்ந்து நில், பேராண்மை, தனி ஒருவன், பூலோகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் அவ்வப்போது இளைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்ல அறிவுரைகளையும் கொடுத்து வருகிறார். ஜெயம் ரவி தற்போது ஜீனி, பிரதர், தக் லைப், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
Urging all the young and first time voters of our country to come out and cast their vote in the upcoming election!
This election use your most basic democratic rights to VOTE for the right candidate.#MeraPehlaVoteDeshKeLiye— Jayam Ravi (@actor_jayamravi) March 16, 2024
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அனைத்து இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறை வாக்களிக்கவிருப்பவர்கள் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தி நம் நாட்டுக்காக சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் இத்தகைய சமயத்தில் ஜெயம் ரவியின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.