கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் கேங்ஸ்டர் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்தப் படத்தின் பெரும் வரவேற்பை அடுத்து 8 ஆண்டுகள் கழித்து ஜிகர்தாண்டா படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இந்தப் படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது அதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் ஜிகர்தண்டா 2 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் அப்டேட்-க்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.