சூர்யா 45 படத்தின் டைட்டில் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸுக்கு பிறகு ரெட்ரோ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாக தயாராகி வருகிறது. அதே சமயம் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, யோகி பாபு, சுவாசிகா, நட்டி நடராஜ், ஷிவதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கோயம்புத்தூர் பகுதிகளில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி வில்லனாக நடிப்பதாகவும் நடிகர் சூர்யா வக்கீலாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.