கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் எம் .குமரன் S/O மகாலட்சுமி. இந்த படத்தை பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியும் அண்ணனுமான இயக்குனர் எம். ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நதியா, அசின், விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அம்மா – மகன் இருவருக்கும் இடையே உள்ள அன்பினை மையமாக வைத்து வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
தற்போது 19 வருடங்கள் கழித்து எம் .குமரன் S/O மகாலட்சுமி இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக அவரே சமீபத்திய நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எம் .குமரன் S/O மகாலட்சுமி 2 படத்திற்கான ஸ்கிரிப்ட்டினை எழுதி இருக்கிறேன். விரைவில் எம் .குமரன் S/O மகாலட்சுமி இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இரண்டாம் பாகத்தில் நதியாவின் கதாபாத்திரம் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.
நதியாவின் கதாபாத்திரம் எம் .குமரன் S/O மகாலட்சுமி படத்தில் இறந்து விட்டதால் இரண்டாம் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் பிரகாஷ்ராஜ் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோகன் ராஜா தற்போது தனி ஒருவன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அதனை முடித்துவிட்டு எம். குமரன் S/O மகாலட்சுமி 2 படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.