spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்..... 'விடாமுயற்சி' குறித்து மகிழ் திருமேனி!

அஜித் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்….. ‘விடாமுயற்சி’ குறித்து மகிழ் திருமேனி!

-

- Advertisement -

விடாமுயற்சி குறித்து மகிழ் திருமேனி பேசியுள்ளார்.அஜித் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்..... 'விடாமுயற்சி' குறித்து மகிழ் திருமேனி!இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது, தல மற்றும் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஓம் பிரகாஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத்தின் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும், சவதீகா எனும் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. அடுத்தது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விடாமுயற்சி படம் குறித்து பேசி உள்ளார். அஜித் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்..... 'விடாமுயற்சி' குறித்து மகிழ் திருமேனி!அவர் பேசியதாவது, “நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தின் தலைப்பை அஜித் தான் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த கதைக்கு இதை விட சிறந்த தலைப்பு கிடையாது. ஆரம்பத்தில் ரசிகர்களுக்காக தான் கதையை எழுதினேன். ஆனால் அஜித் குமார் சார், கதைக்கு என்ன தேவையோ அதை வைத்து தான் பயணிப்போம் என்று சொன்னார். எனவே விடாமுயற்சி படமானது ரசிகர்களுக்காக மட்டுமல்ல அனைத்து விதமான பார்வையாளர்களுக்குமானது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ