மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
மாரி செல்வராஜ் தற்போது தமிழின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார். அவர் தற்போது உதயநிதி இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். டிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில் ‘வாழை’ என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வந்தார். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்தப் படத்தின் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
வாழை படத்தை எடுத்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.
இந்தப் படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். ‘கர்ணன்’ படத்தை அடுத்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைகின்றனர்.