மலையாள சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் சீதாராமம் படத்தின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக உருவெடுத்தார். எனவே தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறார் துல்கர் சல்மான். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே சமயம் துல்கர் சல்மான், காந்தா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்தான் ஆர் டி எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதே சமயம் இந்த படத்தில் துல்கருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளாராம்.
அதாவது நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கூட்டணி துல்கர் சல்மான் படத்தில் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் துல்கர் சல்மான் மற்றும் பிரியங்கா அருள்மோகன் ஆகிய இருவரும் இணைந்து விளம்பரத் தொடரில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.