நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
அதைத்தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தன்னுடைய அடையாளத்தை நிலை நிறுத்தி லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். அந்த வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி கொண்டிருக்கிறார். கடைசியாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா கடந்த 2022-ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நான்கு மாதங்களில் வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்துள்ளனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை தவறவிடுவதில்லை. தன் குழந்தைகளை அழைத்து வெளியில் செல்வது அவர்களுடன் கொஞ்சி விளையாடுவது என தங்களின் பொழுதுகளை கழித்து மகிழ்ச்சியாக உள்ளனர். அதேசமயம் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகை நயன்தாரா, தனது இரட்டை குழந்தைகளை மார்போடு அணைத்து கொஞ்சி தாய் பாசத்தை பொழியும் புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- Advertisement -


