Homeசெய்திகள்சினிமாகொடைக்கானலில் படப்பிடிப்புக்கு வர மறுத்த நயன்தாரா?

கொடைக்கானலில் படப்பிடிப்புக்கு வர மறுத்த நயன்தாரா?

-

- Advertisement -

கொடைக்கானலில் நடைபெறும் மண்ணாங்கட்டி படப்பிடிப்புக்கு நடிகை நயன்தாரா பங்கேற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, யோகி பாபு கூட்டணியில் கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து ஐரா திரைப்படத்திலும் யோகி பாபு நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் நயன்தாரா மற்றும் யோகி பாபு கூட்டணியில் மண்ணாங்கட்டி எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இதனை பிரெண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை டியூட் விக்கி இயக்குகிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்புக்கு நயன்தாரா வர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொடைக்கானல் காடுகளில் பூச்சிகள் இருப்பதால் அவர் வர மறுப்பதாக தெரிகிறது. இதனால், சென்னையிலேயே காடு போன்று மிக பிரமாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ