spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரிவு என்ற தலைப்பில் பார்த்திபன் வெளியிட்ட பதிவு வைரல்!

பிரிவு என்ற தலைப்பில் பார்த்திபன் வெளியிட்ட பதிவு வைரல்!

-

- Advertisement -

திரைத்துறையில் சமீப காலமாகவே பல விவாகரத்து தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெரிய பெரிய ஹீரோக்களும் இசையமைப்பாளர்களும் தங்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். பிரிவு என்ற தலைப்பில் பார்த்திபன் வெளியிட்ட பதிவு வைரல்!அந்த வகையில் இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ ஆர் ரகுமானும் விவாகரத்து குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு நேற்று (நவம்பர் 19) இரவு ஏ ஆர் ரகுமான் உடனான தனது திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் ஏ ஆர் ரகுமானும் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை உறுதி செய்தார். இந்த தகவல் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரிவு என்ற தலைப்பில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான், பிறக்கும் ஒரு நாதமே.. குடைக்குள் மழை நான் எழுதி கார்த்திக் ராஜா இசைக்க இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, உலகின் இன்று அவரவர் விருப்பம் போல் வாழ இனி வழி உள்ளதா? என சம்பந்தப்பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலவே ஊர் விலகி பிரிவு என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

நடிகர் பார்த்திபனும் ஏற்கனவே நடிகை சீதாவை மணந்து பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ