நடிகை பிரியா வாரியர், அஜித் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடைய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எங்கிருந்து நான் தொடங்குவது என்று தெரியவில்லை. என்ன எழுதினாலும் நான் உங்களை எவ்வளவு மதிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியாது. உங்களிடம் முதன்முறையாக பேசியதிலிருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை என்னை ஒரு உறவினரை போல பார்த்துக் கொண்டீர்கள். மற்றவர்களையும் வெளியால் போல் சிறிது நேரம் கூட உணர வைக்கவில்லை. நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக சாப்பிட்ட, நகைச்சுவையாக பேசிய அந்த நாட்கள் மிகவும் சிறந்தது. குடும்பம், கார்பந்தயம், பயணம் ஆகியவை பற்றி நீங்கள் பேசும்போது எல்லாம் எவ்வளவு ஜொலித்தீர்கள் என்பதை உங்கள் கண்களில் பார்த்திருக்கிறேன். உங்களுடைய பொறுமை, ஆர்வம் என அனைத்தும் m எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது. நான் இவ்வளவு எழுதுவதற்கு காரணம் உங்களின் நற்பண்பும் தன்னடக்கமும் தான்.
View this post on Instagram
வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கத்துடன் இருப்பதை உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். தொட்டு தொட்டு பாடலை நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் எப்போதும் மிகவும் பிடித்த தருணமாக நினைக்கிறேன். குட் பேட் அக்லி படத்தில் உங்களுடன் நடித்த அனுபவத்தை நெஞ்சில் பதித்து வைத்திருப்பேன். உங்களுடன் நடித்ததற்கு நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். மீண்டும் உங்களுடன் பணிபுரிய வேண்டுமென விரும்புகிறேன். அதிகமான மரியாதையுடனும் அன்புடனும் உங்களின் தீவிர ரசிகையான பிரியா வாரியர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.