புஷ்பா 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 இல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. அதன்படி புஷ்பா தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கியிருந்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ,ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் எந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 11 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். அதைப்போல் கேரளாவில் 7 கோடி, கர்நாடகாவில் 24 கோடி, வடமாநிலத்தில் 53 கோடி என வசூல் செய்துள்ளது. முதல் நாளை ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டாம் நாளில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் குறைவாக இருந்தாலும் இரண்டு நாட்களில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 400 கோடியை கடந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் இப்படம் 500 கோடியை கடந்து ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.