நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது.
இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா படங்களை போல் தனது அடுத்த படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதேசமயம் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தின் மூலம் கவனம் பெற்ற மந்திரமூர்த்தி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ராகவா லாரன்ஸ் கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் குறித்த மற்றொரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது ஆர் ரவிக்குமார் தனது அடுத்த படத்தை சூர்யாவின் நடிப்பில் இயக்க இருப்பதாகவும் அதற்கான அட்வான்ஸ் பணத்தை பெற்று விட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகிறது. ஆனால் சூர்யா தற்போது புறநானூறு, வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து தான் கால்ஷீட் கொடுப்பதாக ரவிக்குமாரிடம் கூறியிருக்கிறார். அதே வேளையில் மீண்டும் சிவகார்த்திகேயனிடம் சென்று ரவிக்குமார் தனது அடுத்த படத்திற்கான கதையை கூற சிவகார்த்திகேயனும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் அவரும் கால்ஷீட் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார், நடிகர் ராகவா லாரன்ஸிடம் சென்று கதையை கூறியுள்ளாராம். அதற்கு ராகவா லாரன்ஸ் ஓகே சொல்லிவிட்டராம். எனவே அயலான் பட ரிலீஸ்-க்கு பிறகு இது குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.