spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடீப் ஃபேக் வீடியோ என்பது சாதாரணமானது அல்ல ... பெண்களுக்கும் ராஷ்மிகா அறிவுரை....

டீப் ஃபேக் வீடியோ என்பது சாதாரணமானது அல்ல … பெண்களுக்கும் ராஷ்மிகா அறிவுரை….

-

- Advertisement -

டீப் ஃபேக் வீடியோ குறித்து முதன்முதலாக நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். செயற்கை தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்தினால், 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசும் உத்தரிவிட்டது.
இது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, டீப் ஃபேக் வீடியோ என்பது சாதாரணமானது அல்ல என்பதை அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று தங்களை பாதிக்கும்போது, அமைதியாக இல்லாமல் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

MUST READ