Homeசெய்திகள்சினிமாவெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை... துல்கர் சல்மான் கண்டனம்...

வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை… துல்கர் சல்மான் கண்டனம்…

-

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு தம்பதியினர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதலுக்கு எதிராக பிரபல நடிகர் துல்கர் சல்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் – பிரேசிலைச் சேர்ந்த தம்பதியினர் ஆசியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆசியா முழுவதும் சுற்றும் நோக்கத்தில் இந்தியாவும் அவர்கள் வந்தடைந்தனர். கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற அவர்கள், டும்கா மாவட்டத்திற்கு சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல், கொடூரமாக தாக்கி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை அப்பெண் வீடியோவாக பதிவிட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம அறிக்கை வெளியிட்டது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, மர்ம கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், இச்சம்பவத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சினிமா நடிகர் நடிகைகளும், இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானும், இதற்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார். அதன்படி, இதை கேள்விப்பட்டதும் நொறுங்கிப்போனேன். நீங்கள் இருவரும் கோட்டயம் பகுதிக்கு வந்தபோது, அங்குள்ள நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு விருந்து அளித்தனர். இதுபோன்ற சம்பவம் யாருக்கும் வரக்கூடாது என்று பதிவிட்டனர். அதேபோல, நடிகை ரித்தா சதாவும் கண்டனம் தெரிவித்தார். இந்தியர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்துவது போல வெளிநாட்டுப் பெண்களையும் நடத்துகின்றனர். இது மிகவும் அவமானமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ