நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய நடனமும் ஏராளமான ரசிகர்களை சாய்பல்லவி பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இவர் தமிழில் மாரி 2, கார்கி, கரு, என் ஜி கே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதேசமயம் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் தண்டேல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி விளம்பரத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது சமீபத்தில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தங்களது பொருட்களை விளம்பரம் செய்யும் படத்தில் நடிக்குமாறு சாய்பல்லவி இடம் கேட்டிருக்கிறது. அதற்காக 2 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் சாய் பல்லவி மருத்துவர் என்பதால் அழகு சாதன பொருட்களில் இருக்கும் தீமைகளை அறிந்து அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சாய் பல்லவிக்கு மேக்கப் போடுவது பிடிக்காது. அவர் சினிமாவில் கூட மேக்கப் இல்லாமல் தான் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.