அமெரிக்காவில் மட்டும் 2 ஆயிரம் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாக உள்ளது.
கேஜிஎப் எனும் பிரம்மாண்டத்தை திரைக்கு கொண்டு வந்த இந்தியாவின் மாபெரும் இயக்குநராக உருவெடுத்தவர் பிரசாந்த் நீல். யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம், யாரும் எதிர்பார்க்காத அளவு பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் வாரிக் குவிந்தது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இருப்பினும், உலகம் முழுவதும் வௌியான கேஜிஎஃப் 2 அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை புரிந்தது. அதுமட்டுமன்றி யாஷ் மற்றும இயக்குநர் பிரசாந்த் நீலை, இந்தியாவின் மாபெரும் நட்சத்திரங்களாக நிலை நிலைத்தியது.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு சலார். இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கிறார். பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 10 கோடி பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது.
இந்நிலையில், சலார் படத்தின் முன்பதிவு தொடங்கியது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 ஆயிரம் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாக உள்ளது.