Homeசெய்திகள்சினிமாஅவருக்கு சினிமா மீது காதல்.... தனுஷ் குறித்து பேசிய சமுத்திரக்கனி!

அவருக்கு சினிமா மீது காதல்…. தனுஷ் குறித்து பேசிய சமுத்திரக்கனி!

-

- Advertisement -

சமுத்திரக்கனி, நடிகர் தனுஷ் குறித்து பேசி உள்ளார்.அவருக்கு சினிமா மீது காதல்.... தனுஷ் குறித்து பேசிய சமுத்திரக்கனி!நடிகர் தனுஷ் ராயன் படத்திற்கு பிறகு இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சமுத்திரக்கனி,ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட தேனி பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி, தனுஷ் குறித்து பேசியுள்ளார்.அவருக்கு சினிமா மீது காதல்.... தனுஷ் குறித்து பேசிய சமுத்திரக்கனி! அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “தம்பி தனுஷ் ராயன் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனதும் திங்கட்கிழமை என்னை அழைத்து, ‘அண்ணே ரெடியா இருங்க. பத்து நாளில் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு போறோம். கால்ஷீட் கொடுத்துடுங்க ஆமா’ என்று சொன்னார். உடனடியாக இதுதான் அடுத்த படம் என்று இட்லி கடை படத்தின் கதையை சொன்னார். அதைத்தொடர்ந்து அடுத்த பத்தாவது நாளில் தேனியில் படப்பிடிப்பில் இருந்தோம். இதெல்லாம் தனுஷுக்கு சினிமாவின் மீதான காதல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ், சமுத்திரகனி ஆகியோர் இணைந்து விஐபி 1, விஐபி 2, வாத்தி போன்ற படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ