நடிகர் சந்தீப் கிஷன், தற்போது புதிய இயக்குனராக உருவெடுத்துள்ள ஜேசன் சஞ்சய் குறித்து பேசி உள்ளார்.நடிகர் சந்தீப் கிஷன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதே சமயம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தது இவர் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நேற்று (நவம்பர் 29) இந்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதன்படி வீடியோ ஒன்றின் மூலம் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சந்தீப் கிஷன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜேசன் சஞ்சய் குறித்து பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, “நான் ஜேசன் சஞ்சய் – ஐ சந்தித்தபோது அவருடைய பணிவு மற்றும் ஸ்கிரிப்ட் எழுதுவதில் அவருடைய முயற்சியைக் கண்டு வியப்படைந்தேன். 2 மணி நேரம் 50 நிமிடங்கள் அவர் இடைவெளி இல்லாமல் எனக்கு படத்தின் கதையை விவரித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரி மாதத்தில் தொடங்கும். இது கலகலப்பான ஆக்சன் என்டர்டெயினர் படமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -