வதந்தி 2 வெப் சீரிஸின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, லைலா, நாசர் ஆகியோரின் நடிப்பில் வதந்தி என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த வெப் தொடரை புஷ்கர் – காயத்ரி தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருந்தார். ஒரு பெண்ணின் கொலை மற்றும் அதை சுற்றி பரவும் வதந்திகள் பற்றிய கதைதான் இது. அதன்படி கிரைம் திரில்லர் ஜானரில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை கடந்து வதந்தி சீசன் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. அதன் பின்னர் சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்ததால் வதந்தி 2 வெப் தொடரின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை (மே 23) முதல் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.