தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேகர் கம்முலா. இவர் அனாமிகா, லவ் ஸ்டோரி என பல படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது இவர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் குபேரா எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் 51வது படமான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் நாகார்ஜுனா குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர் பேசியதாவது, “தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் மிகப்பெரிய ஸ்டார் நடிகர்கள். அவர்கள் உச்சத்தில் இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்கள். அவர்களுக்கு இடையில் சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இருக்காது. படப்பிடிப்பு தளத்தில் அவர்களைப் பார்ப்பவர்கள் இரண்டு பேரையும் பெரிய ஸ்டார்கள் என்று சொல்லவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் அண்ணன் – தம்பி மாதிரி பழகினார்கள். இருவருக்கும் இடையில் அருமையான நட்பும் ஆழமான அன்பும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அவங்க ரெண்டு பேரும் அண்ணன் – தம்பி மாதிரி பழகுனாங்க….. தனுஷ், நாகார்ஜுனா குறித்து சேகர் கம்முலா!
-
- Advertisement -