spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிடீரென சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்...... இதுதான் காரணமா?

திடீரென சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்…… இதுதான் காரணமா?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.திடீரென சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்...... இதுதான் காரணமா? அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கமர்சியல் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சமீப காலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் திடீரென நாம் தமிழர் கட்சி தலைவரும் நடிகர்மான சீமானை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.திடீரென சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்...... இதுதான் காரணமா? எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று விசாரித்த போது சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் சீமானை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் சீமானை நேரில் சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது அரசியல் கதைகளத்தில் தயாராக இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று நம்பப்படுகிறது.

MUST READ