Homeசெய்திகள்சினிமாகுலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை போட்ட கன்னிகா- சினேகன்.. அப்பாவின் புன்னகை

குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை போட்ட கன்னிகா- சினேகன்.. அப்பாவின் புன்னகை

-

- Advertisement -

சென்னை: பாடலாசிரியர் சினேகன் கன்னிகா தம்பதி தங்களின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்திய வீடியோவை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பத்து வருடங்களாக காதலித்து வந்தாலும் தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலை வெளிப்படுத்திய சினேகன், கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து இந்த தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. தன்னுடைய குழந்தைகள் பிறந்ததை சினேகன் மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருந்தார்.

தன்னுடைய அம்மாவே தனக்கு குழந்தையாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன் ஆனால் எனக்கு இரண்டு பெண் குழந்தைகளாக என்னுடைய அம்மா என்னிடம் திரும்ப வருவார் என்று நினைக்கவில்லை என்று சினேகன் கூறி இருந்தார்.

சினேகனின் அம்மா பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார் அவருடைய தந்தையையும் வயதான காலத்தில் தான் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு தன் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு மொட்டை போடும் போது சினேகனின் தந்தையும் மொட்டை போட்டு இருக்கிறார். அவர் வயதான காலத்தில் தன்னுடைய இரண்டு பேத்திகளையும் பார்த்ததும் மகிழ்ச்சியில் சிரித்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பேத்திகளுக்கு ஆசி வழங்கி அவர்களை மடியில் வைத்து கொஞ்சிய தந்தையின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்த்து சினேகனின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

 

MUST READ