நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் படபிடிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் சில நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்ட ரஜினி, வருடா வருடம் இமயமலைக்கு சென்று கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களில் தரிசனம் செய்வது போல இந்த வருடமும் இமயமலைக்கு சென்றுள்ளார்.
எனவே ரஜினி வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் 171 வது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவித்த வீடியோ ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும் சாண்டி மாஸ்டர், நாகார்ஜுனா போன்றோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் கூலி படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி தொடங்கும் என நடிகர் ரஜினி அப்டேட் கொடுத்துள்ளார். இருப்பினும் படக்குழுவினர் சார்பில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


