டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார்.
சமீபத்தில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், மிதுன் ஆகியோர் நடித்திருந்தனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். பொருளாதார கஷ்டம் காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை எதிர்கொண்டு புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. எதார்த்தமான இயக்கம், கதாபாத்திரங்களின் தேர்வு, வலுவான கன்டென்ட் ஆகியவைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இந்த படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறது. மேலும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ஒரு புதுமுக இயக்குனராக இப்படி ஒரு அருமையான படைப்பை கொடுத்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
#AbishanJeevinth in recent interview
– #Thenali is the inspiration to write this story.
– I have a idea to make Part 2 of Thenali.#TouristFamilypic.twitter.com/jZ2tNmHK57— Movie Tamil (@MovieTamil4) May 3, 2025
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய அபிஷன், “கமல்ஹாசனின் தெனாலி படத்திலிருந்து தான் இந்த கதையை எழுதினேன். அதன்படி தெனாலி படத்தின் செகண்ட் பார்ட் பண்ண வேண்டும் என்ற ஐடியா இருந்தது. இது தவிர மாடர்ன் ஃபேமிலி பற்றி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இந்த இரண்டையும் சேர்த்துதான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பண்ணேன். எனக்கு கிளைமாக்ஸுக்கான ஐடியா கிடைத்ததனால்தான் முழு கதையையும் எழுத வேண்டி இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.